தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

40 ஆண்டுகள் குடிநீர் வழங்கிய காலாவதியான நீர்தேக்க தொட்டிக்கு பிரியாவிடை கொடுத்த கிராம மக்கள்

 

Advertisement

ஈரோடு, ஜன.25: ஈரோடு அருகே 40 ஆண்டுகளாக குடிநீர் வழங்கிய காலாவதியான மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட உள்ளதையொட்டி அந்த கிராம மக்கள் தொட்டிக்கு மலர் தூவி மரியாதை செய்து பிரியா விடை கொடுத்தனர். ஈரோடு அடுத்த 46 புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட நொச்சிகாட்டுவலசு பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் வழங்கும் வகையில் 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட நீர்தேக்க தொட்டியானது கடந்த 1988ம் ஆண்டு கட்டப்பட்டு, பயன்பாட்டில் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி பழமையின் காரணமாக காலாவதியானது. இந்த தொட்டிக்கு அருகிலேயே 70 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுப்பட்டு பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதனால், காலாவதியான பழைய மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிக்கப்பட உள்ளது. தொடா்ந்து 40 ஆண்டுகளாக குடிநீர் வழங்கிய மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்கு அந்த கிராம மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்து பிரியா விடை கொடுத்தனர்.

Advertisement