தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடம் ஓராண்டு நீட்டிப்பு சுகாதாரத்துறை உத்தரவு வேலூர் உட்பட 12 அரசு மருத்துவமனைகளில்

வேலூர், செப்.18: வேலூர் உட்பட 12 அரசு மருத்துவமனைகளில் 20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டு நீட்டத்து உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் மருத்துவக்கல்வி ஆராய்ச்சி இயக்குநரகத்தின் கீழ் 36 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. இதில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனை, சென்னை கே.கே.நகர் மறுவாழ்வு சிகிச்சை மையம், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில், தற்காலிக அடிப்படையில் 27 அலுவலக கண்காணிப்பாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த மருத்துவமனைகளில் தற்காலிகமாக பணிபுரியும் அலுவலக கண்காணிப்பாளர் பணியிடங்களை நீட்டிக்க, அரசுக்கு முன்மொழிவு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மருத்துவமனைகளில் பணிபுரியும் தற்காலிக கண்காணிப்பாளர்களை நீட்டிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள 12 அரசு மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த, 20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடங்கள் ஓராண்டு நீட்டிக்க அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 கண்காணிப்பாளர், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 கண்காணிப்பாளர் பணியிடங்கள், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 2, சென்னை எழும்பூர் மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் 2, சென்னை கே.கே.நகர் மறுவாழ்வு மையத்தில் 1 கண்காணிப்பாளர் பணியிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 கண்காணிப்பாளர் பணியிடம், திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் 1, சென்னை ஓமந்தூரார் அரசு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் 2, மதுரை ராஜாஜி மருத்துவமனையில் 4, சென்னை ராயப்பேட்டை தொற்றாநோய் சிகிச்சை மருத்துவமனையில் 1, சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் 1, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1 பணியிடம் என மொத்தம் 20 தற்காலிக கண்காணிப்பாளர் பணியிடங்களை ஓராண்டு நீட்டித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement