Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் 2026-27ம் நிதியாண்டில் ரூ.1,300 கோடி வருவாய் இலக்கு: அதிகாரிகள் தகவல்

வேலூர், ஜூன் 22: வேலூர் பத்திரப்பதிவு மண்டலத்தில் 2026-27ம் நிதியாண்டில் ரூ.1,300 கோடி வருவாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் 579 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டியது. இந்த வருவாயை பெருக்கும் வகையில் கடந்த 2012ல் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வருவாய் இலக்கு வைத்தாலும், அதை அடைவது என்பது எட்டாக்கனியாக இருந்தது.