Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மாந்தோப்பில் 3 யானைகள் புகுந்து அட்டகாசம்; மாமரங்கள், 2 டன் மாங்காய்கள் சேதம்

கே.வி.குப்பம், ஜூன் 19: கே.வி.குப்பம் அருகே நள்ளிரவில் மாந்தோப்பில் 3 யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து 2 டன் மாங்காய்களையும், மாமரங்களையும், தென்னை, வாழை மரங்களையும் சேதப்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வனப்பகுதியில் இருந்து அவ்வப்போது காட்டு யானைகள் வெளியேறி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனை வனத்துறையினர் கண்காணித்து யானைகளை, விவசாயிகள் உதவியுடன் விரட்டி அடித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 யானைகள், செஞ்சி அடுத்த ராஜாதோப்பு அணை பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்தது.