Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தால் சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியும்: கிராமசபையில் கலெக்டர் பேச்சு

திருப்பத்தூர், ஜூன் 6: திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கதிரிமங்கலம் ஊராட்சி என்.எம்கோயில் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி வளாகத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ரவிகுமார் கலந்துகொண்டார்.

முன்னதாக, உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுசூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை பொதுமக்கள் அனைவரும் எடுத்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், \\\"தூய்மையான கிராமம், பாதுகாப்பான காலநிலை\\\" பிரசாரத்தின் மூலம் அடைந்த சாதனைகள், புதிய திடக்கழிவு மேலாண்மை விதிகள் மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகள், கிராம ஊராட்சிகளில் பெரிய அளவில் கழிவுகளை உருவாக்குபவர்களை கண்டறிதல், தூய்மைப் பணிகளில் பொதுமக்களின் ஆகிய முக்கியப் பொருட்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, தீர்மானம் இயற்றப்பட்டது. பின்னர் கலெக்டர் ரவிகுமார் பேசியதாவது:

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என நோக்கத்தோடு, அனைத்து கிராமங்களிலும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தின் முக்கிய நோக்கமானது, \\\"தூய்மையான கிராமங்கள் பாதுகாப்பான காலநிலை\\\" என்ற நோக்குடன் நடத்தப்படுகிறது. பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது.

கிராமத்திற்கு தூய்மை பணியாளர்கள் காலை வருவதற்கு முன்பாகவே அனைவரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். அந்த குப்பைகளை தூய்மை பணியாளர்கள் சேகரித்து மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து தனித்தனியாக ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில் கொட்டப்பட வேண்டும் எனவும், நெகிழிப் பொருட்கள் பயன்பாட்டினை குறைப்பதற்கு, சுழற்சி முறையில் மீண்டும் பயன்படுத்துவதனால் மட்டுமே சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்க முடியும்.

நமது வளர்ச்சி நிலையான நீட்டித்த வளர்ச்சியாக இருக்கவேண்டும். அதற்கு சுற்றுப்புற சூழலை பாதுகாப்பது, குறிப்பாக திடக்கழிவு மேலாண்மையை முறையாக கடைப்பிடித்து மறுசுழற்சி செய்வதன் மூலமாகத்தான் இந்த நிலையான நீட்டித்த வளர்ச்சியை எட்டமுடியும். அனைவரும் சுற்றுச்சூழலை பாதுகாத்திட பங்களிப்புடன் அடுத்த தலைமுறையினரும் இதன் முக்கிய துவத்தை எடுத்துரைக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்)முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அப்துல்ரஹ்மான், ஊராட்சி மன்ற தலைவர் மாரிஇளையராஜா, துணைத்தலைவர் வடிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் லலிதாமோகன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமாவதி, மணவாளன், ஊராட்சி செயலாளர் குமார் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.