Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல் அறுவடை செய்து இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வரலாம்: கண்காணிப்பாளர் தகவல்

ராணிப்பேட்டை, ஜூன் 6: ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனைக்கு நேற்று கொண்டு வந்தனர். இதில் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 606 ரக நெல் மூட்டைகள் அதிகபட்ச விலையாக ரூ.2,341க்கு விற்பனை ஆனது. இந்நிலையில் அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்றைய 75 கிலோ நெல் மூட்டைகளின் விற்பனை விலை விவரம் பின்வருமாறு: இதில் ஏடிடி 37 குண்டு ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,313க்கு மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,675க்கும், கோ 51 வகை ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,401க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,699க்கும் விற்பனை செய்யப்பட்டது.

201 ரக வகை நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,693க்கும், 606 ரக வகை நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,306க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,341க்கும், 1010 ரக குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,572க்கும், ஆர்.என்.ஆர் ரக குறைந்தபட்ச விலை ரூ.1,876க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,339க்கும், சோனா ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.1,908க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,329க்கும், ஸ்ரீ வகை ரக நெல் குறைந்தபட்ச விலை ரூ.2,219க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,309க்கும், சுவேதா வகை ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலை ரூ.2,144க்கும், ரித்திக்கா ரக நெல் குறைந்தபட்ச விலை மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.1,889க்கும், நர்மதா ரக நெல் குறைந்தபட்ச விலையாக ரூ.1,999க்கும் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,180க்கும், கிருஷ்ணா பொன்னி ரக நெல் குறைந்தபட்ச நெல் மற்றும் அதிகபட்ச விலையாக ரூ.2,140க்கு விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

விவசாயிகள் எடுத்து வரும் நெல் மூட்டைகள் விற்பனை செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வங்கியில் பணம் செலுத்தப்படுகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கேழ்வரகு 100கிலோ நெல் மூட்டை அதிகபட்ச விலையாக ரூ.3,300க்கு விற்பனை ஆனது. இந்த விற்பனை கூடத்தில் பல்வேறு ரகம் நெல் மூட்டைகள் நல்ல விலைக்கு விற்பனை போவதால் விவசாயிகள் தங்கள் விலை நிலங்களில் அறுவடை செய்த நெல் மூட்டைகளை இருப்பு வைத்திருக்கும் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வரலாம் என அம்மூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் சே.ராமமூர்த்தி தெரிவித்தார்.