Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திமுக ஆட்சியில் வீடு கொடுத்தும், தவெக ஆட்சியில் குடிநீர் இல்லை; கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்ட மக்கள்

வேலூர், ஜூன் 6: கணியம்பாடி அடுத்த பாலம்பாக்கத்தில் இருளர் இன மக்களுக்கு குடிநீர் கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திமுக ஆட்சியில் வீடு கொடுத்தனர். தவெக ஆட்சியில் குடிநீர் இல்லை என்று முழக்கங்களை எழுப்பினர். வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேப்பம்பட்டு அடுத்த பாலம்பாக்கத்தில் அரசு வழங்கிய இடத்தில் வீடு கட்டி வசித்து வரும் இருளர் இன மக்களுக்கு குடிநீர், மின்சாரம் சாலை வசதி உள்ளிட்டவை செய்து கொடுக்காததால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம்.

குடிநீர், மின்சாரம், சாலை வசதி கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறி இருளர் இன மக்கள் 30க்கும் மேற்பட்டவர்கள் காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் திமுக ஆட்சியில் வீடு கொடுத்தனர். ஆனால் இப்போது தவெக ஆட்சியில் குடிநீர், மின்சாரத்திற்கும் தவிக்கும் நிலை உள்ளது என்று கூறி முழக்கங்களை எழுப்பினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த ஆர்டிஓ செந்தில்குமார் அவர்களை கலெக்டர் அலுவலகம் உள்ளே அழைத்து சென்று ேபச்சுவார்த்தை நடத்தினார். அதில் நேரில் வந்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதை ஏற்று தர்ணாவில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். ஏற்கனவே வேலூர் மாநகராட்சியின் பல பகுதிகளில் குடிநீர் பிரச்னை தலையெடுத்துள்ள நிலையில் தற்போது கணியம்பாடி ஒன்றியம் பாலம்பாக்கம் பகுதியில் குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.