தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்ட பணிகள் 18 மாதங்களில் முடிக்கப்படும்: தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் உறுதி

Advertisement

சென்னை: வேளச்சேரி பரங்கிமலை இடையிலான பறக்கும் ரயில் திட்டத்தை 18 மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும், என தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் தெரிவித்துள்ளார். தென்சென்னை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜோதியம்மாள் நகர், தாடண்டர் நகர், அரசு பண்ணை ஆகிய பகுதிகளில் நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தல் பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திரா, மாவட்ட செயலாளர் ரவி, பகுதி செயலாளர் ஷேக் அலி, பழனி உள்ளிட்ட பலரும் உடன் சென்று வாக்கு சேகரித்தனர். பின்னர் ஜெயவர்தன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘நான் நாடாலுமன்ற உறுப்பினராக இருந்தபோது, வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பிரச்னையை முடித்துவத்தேன். ஆனால் அந்தப்பணி 5 வருடமாக நிலுவையில் உள்ளது.

மீண்டும் நான் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் அந்த பணியை 18 மாதங்களுக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவைப்பேன். இதனால் லட்சகணக்கான தென்சென்னை பகுதிமக்கள் பயன்பெறுவார்கள். அதேபோல் மெட்ரோ ரயில் திட்டத்தை வேகப்படுத்தி, ராஜிவ்காந்தி சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத அளவிற்கு நடவடிக்கை எடுப்பேன். ஒன்றிய அரசிடமிருந்து நிதி பெற்று மிக பெரிய அளவில் மருத்துவமனை ஒன்று சோழிங்கநல்லூர் தொகுதியில் அமைப்பேன்.

ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நிதிபெற்று பல்வேறு திட்டங்களை தென்சென்னை தொகுதியில் அமைப்பேன். இனிவரும் காலங்களில் தென்சென்னை தொகுதியில் வெள்ளம் ஏற்படாத வகையில், துரிதமாக நடவடிக்கை எடுப்பேன். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் உள்ள பெருங்குடி குப்பை கிடங்கு ஒரு வருடத்திற்குள் 100% அகற்றப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement