தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஊராட்சி மன்ற தலைவரை நீக்கக்கோரி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கிராம மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம்

Advertisement

செய்யூர்: சித்தாமூர் அருகே, ஊராட்சி மன்ற தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி, நெற்குணம் ஊராட்சி கிராம மக்கள் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது நெற்குணம் ஊராட்சி. இப்பகுதி ஊராட்சி தலைவராக தமிழரசி ராமலிங்கம் என்பவர் பதவி வகித்து வருகிறார். இந்த ஊராட்சியில் அடங்கிய வயலூர் கிராமத்தில், புதிதாக கல்குவாரி அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தனர்.

இந்நிலையில், அவ்வூராட்சி தலைவர், குவாரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்படுவதாகவும், பொதுமக்களுக்கு தெரியாமல் கிராம சபை கூட்டத்தில் குவாரி அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சியில் நடைபெறும் பணிகளில் ஊராட்சி தலைவர் பல்வேறு ஊழல்கள் புரிந்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர். இந்நிலையில், நேற்று அக்கிராம மக்கள் 300க்கும் மேற்பட்டோர் சித்தாமூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊராட்சி தலைவரை பதவியில் இருந்து நீக்கக்கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, அங்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதனையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement