Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

வக்கீலிடம் ரூ.16.5 லட்சம் மோசடி

திருச்சி, ஜூலை 18: திருச்சி தஞ்சாவூர் ரோடு பழைய பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ்(33) வக்கீல். இவரிடம் நவல்பட்டு காவேரி நகரை சேர்ந்த பிரகாஷ் (37) என்பவர் அறிமுகம் ஆகி, பழவியாபாரம் செய்து வருவதாகவும், வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறினார். இதனை நம்பி கடந்த 31.08.25 அன்று சுபாஷ் சந்திரபோஸ் ரூ.1 லட்சம் பணத்தை பிரகாஷிடம் கொடுத்தார்.

பின்னர் ஒரு வாரத்திற்குள் ரூ.1000 லாபத்தை பெற்றார். அதன் பின்னர் சுபாஷ், பிரகாசிடம் ரூ.16.5 லட்சம் பணத்தை ரொக்கமாகவும் வங்கி பரிவர்த்தனை மூலமாகவும் கொடுத்தார். பின்னர் பிரகாஷ் பணத்தையும் லாபத் தொகையையும் தரவில்லை. இந்நிலையில் சுபாஷ் நெருக்கடி கொடுக்கவே பிரகாஷ் காசோலை அளித்துள்ளார். ஆனால் வங்கியில் பணமில்லாமல் காசோலையை ரிட்டன் ஆனது. இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் பிரகாஷை கைது செய்தனர்.