Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பசுமையாக்கம் திட்டத்தில் 200 மரக்கன்றுகள் நடவு

சமயபுரம், ஜூலை 16: மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில், நகர்ப்புற பசுமையாக்கம் திட்டத்தின் கீழ் 200 மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடந்தது. தமிழகத்தில் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க மரங்கள் வளர்ப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி சார்பில் நகர்ப்புற பசுமையாக்கம் திட்டத்தின் கீழ் மண்ணச்சநல்லூர் இருந்து இனாம்கல்பாளையம் சாலை வரை இருபுறமும், அதேபோல் மண்ணச்சநல்லூர் சமயபுரம் பிரதான சாலையின் இருபுறமும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி, சுகாதார ஆய்வாளர் தேன்மொழி, 11 வது வார்டு கவுன்சிலர் கோபி , தூய்மை அலுவலர்,பேரூராட்சி பணியாளர்கள் இணைந்து 200 மரக்கன்றுகளை நட்டனர்.