திருச்சி, நவ.13: மருங்காபுரியில் நவ.15ம் தேதி எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கு சிலிண்டா் வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் போன்ற குறைபாடுகளை களையும் பொருட்டு மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், எண்ணெய் நிறுவன மேலாளா்கள் மற்றும் எரிவாயு வாடிக்கையாளா்கள் ஆகியோர் கலந்து கொள்ளும் எரிவாயு நுகா்வோர் குறைதீர்க்கும் கூட்டம் திருச்சி மாவட்டம், மருங்காபுரி வட்டம், தாசில்தார் அலுவலகத்தில் வரும் நவ.15ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் மருங்காபுரி வட்டத்திற்குட்பட்ட எரிவாயு நுகா்வோர் குறைகளை பதிவு செய்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட எரிவாயு நுகா்வோர், அங்கீகாிக்கப்பட்ட தன்னார்வ நுகா்வோர் அமைப்புகள் கலந்து கொண்டு எரிவாயு உருளை விநியோகம் தொடா்பான குறைபாடுகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
