Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

ஸ்ரீரங்கம் பகுதியில் மனித எலும்புக்கூடு

திருச்சி, மே 6: ஸ்ரீரங்கம் பகுதியில் கிடந்த மனித எலும்புக்கூடினை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி ஸ்ரீரங்கம் கீழகொண்டயபேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடு கிடப்பதாக மே.4ம் தேதி ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் அங்கு சென்ற போலீசார், அதனை கைப்பற்றி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.