Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

திருவெறும்பூரில் போலீசார் கொடி அணிவகுப்பு

திருவெறும்பூர், மே 4: சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அச்சமின்றி இருப்பதற்காக திருவெறும்பூர் ஏஎஸ்பி அரவிந்த் பனாவாத் தலைமையில் கொடி அணிவகுப்பு நடந்தது. தமிழகம் முழுவதும் கடந்த 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த நிலையில் அப்படி நடந்த சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணும் வாக்கு எண்ணும் மையங்களில் தொடங்குகிறது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் என்ன நடக்கும் என தெரியாமல் பீதி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பொதுமக்கள் அச்சத்தை போக்கும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆங்காங்கே கொடி அணிவகுப்பு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் ஏஎஸ்வி அரவிந்த் பனாவாத் தலைமையில் திருவெறும்பூர் உட்கோட்ட காவல் நிலையத்தில் உள்ள சுமார் 100 போலீசார் காட்டூர் மஞ்சத்திடல் பாலத்தில் இருந்து திருவெறும்பூர் டி நகர் வரை திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் கொடி அணிவிப்பில் ஈடுபட்டனர்.