Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

திருச்சியில் விபச்சாரம் 2 பெண்கள் மீட்பு

திருச்சி, ஆக.1: திருச்சியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக 2 புரோக்கர்களை கைது செய்தனர். திருச்சி கே.கே.நகர் பகுதியில் உள்ள வீட்டில் விபச்சாரம் நடப்பதாக கடந்த 30ம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, அங்கு 25வயது மற்றும் 45வயதுள்ள இரண்டு பெண்களை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, 2 பெண்களை மீட்டு திருச்சி இபி ரோட்டில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிந்து, புரோக்கர்கள் நெல்லை பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த நிகா வேலு(32), சிவமுருகன்(26) ஆகியோரை கைது செய்தனர். புரோக்கர்களிடம் இருந்து 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நிகா வேலு, தற்போது கே.கே.நகர் பகுதியில் வசித்து வந்தார் என்பது குறிப்பிடதக்கது.