Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதை பொருள் இல்லா தமிழகத்தை உருவாக்கிட டூவீலர் விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜூலை 23: திருச்சி மாநகர போலீசார், மாவட்ட நிர்வாகம் மற்றும் புனித வளனார் கல்லூரி சார்பில் இளைஞர்களின் நலனை காக்க \”போதை பொருள் இல்லா தமிழகத்தை” உருவாக்கிட டூவீலர் விழிப்புணர்வு பேரணி மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி எடுத்ததனர்

திருச்சி மாநகர போலீசார் மாவட்ட நிர்வாகம் மற்றும் புனித வளானர் கல்லூரி இணைந்து போதை பொருள்களின் தீமைகள் குறித்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி, நேற்று மாநகர காவல்துறை மற்றும் புனித வளனார் கல்லூரி மாணவர்கள் பங்கு பெற்ற டூவீலர் வாகன பேரணியை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மன்னார்புரம் ரவுண்டானாவில் கொடியசைத்து துவங்கி வைத்தார்.