Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்காததால் கேள்விக்குறியாகும் குறுவை சாகுபடி

திருச்சி, ஜூன் 22: திருச்சி மாவட்டத்தில் நடப்பாண்டு ஜூன் 12ல் தண்ணீர் திறக்க முடியாத சூழலால், திருச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் மின்சார தட்டுப்பாடு காரணமாக ஏற்பட்டுள்ள தண்ணீர் பற்றாக்குறை விவசாயிகளின் குறுவை நெல் சாகுபடி கேள்விக்குறியாக்கியுள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் நடப்பாண்டு அதற்கான சூழல் உருவாகாததால் காவிரி பாசனத்தை நம்பியுள்ள டெல்டா விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் 79.26 டி.எம்.சி அளவுக்கு தண்ணீர் உள்ளது.

நீர் வரத்து 1790 அடி. அணையின் முழுக்கொள்ளளவு 93.47 டி.எம்.சி-யாகும். குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டுமெனில் அணையில் குறைந்தபட்சம் 70 முதல் 80 டி.எம்.சி வரை நீர் இருப்பு தேவைப்படும் என்று விவசாய அமைப்புகள் மற்றும் நீர்வள நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். காரணம், குறுவை சாகுபடி மட்டுமல்லாமல் பின்னர் நடைபெறும் சம்பா சாகுபடி, குடிநீர் பயன்பாடு மற்றும் தொழிற்சாலை தேவைகளுக்கும் நீரை பாதுகாக்க வேண்டியது அவசியம்.