Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மது போதையில் தகராறு; வாலிபரை தாக்கிய3 பேர் கைது

திருச்சி, ஜூலை 17: திருச்சி பாலக்கரையைச் சேர்ந்தவர் ஆரோக்கிய அந்தோணிதாஸ் (36). அதே பகுதியை சேர்ந்தவர்கள் பிரவீன்(31), ஜான்பீட்டர்(33), எடிசன்(26). இவர்கள் கடந்த 14ம் தேதி இரவு தாஸ் வீட்டின் அருகே மது அருந்தி உள்ளனர். அப்போது, அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பிரவீன் தரப்பினர், தாசை ஆபாசமாக திட்டினார். தொடர்ந்து, மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில், படுகாயமடைந்த தாஸ் தென்னூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிந்து, பிரவீன், பீட்டர், எடிசன் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தெருவிளக்குகள் பழுதால் இருட்டில் செல்ல அச்சம்

திமுக விஜய் (காஜாமலை): என் வார்டில் பெரும்பாலான தெரு விளக்குள் பழுதாகிவிட்டன. இதனால் இரவு நேரங்களில் இருட்டில் சாலைகளில் செல்ல பெண்கள், பொதுமக்கள் அச்சம் கொண்டுள்ளனர். மேலும் பாதாள சாக்கடைக்காக அமைக்கப்பட்டிருக்கும் மேன்வெல்கள் நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால் பழுதடைந்துள்ளன. அவற்றை சீரமைத்துக்கொடுக்க வேண்டும். வார்டில் சுகாதாரப்பணியில் வெறும் 8 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். அவர்களால் முழுமையாக சுகாதாரப்பணிகளில் ஈடுபட முடியவில்லை. வார்டிலுள்ள குடிநீர் தொட்டிகள் பல நாட்களாக சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. எனவே அவற்றை சுத்தம் செய்ய ஆவண செய்ய வேண்டும் என்றார்.