Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

குறைதீர் முகாமில் போலீசுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

திருச்சி, ஜூன் 9: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதிக் தயாள் தலைமையில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி அளிக்க வந்திருந்தனர். அப்போது காலை மக்கள் கூட்டம் குறைந்த அளவிலேயே இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் தலைமையில் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் சிறிது நேரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது நூற்றுக்கணக்கான மக்கள் திடீரென மனு அளிக்க ஒன்றாக திரண்டனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசார் மக்களை சோதனை செய்வதற்காக வாயிலில் நிறுத்தினர். இதனால் மக்களுக்கும் போலீசார் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. சோதனையை தொடர்ந்து மக்களை மனு அளிக்க அனுமதித்தனர். அப்போது மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர். மனு அளிக்கும் நாள் நிறைவடையாமல் ஏன் பாதியிலேயே ஆய்வுக் கூட்டத்தை நடத்த வேண்டும் என மக்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.