Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 9 ஆண்டு சிறை

திருச்சி, மே 7: திருச்சியில் 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 9 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மகிளா கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது. திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் 19 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி வசித்து வந்தார். இவரை கடந்த 17.8.2024 அன்று, திருச்சி உய்யகொண்டான் பகுதியை சேர்ந்த சினுக்கி (எ) சின்ன ராஜா(25) என்பவர் ஆசை வார்த்தைகள் கூறி கொள்ளிடம் கரை பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் பாட்டிக்கு தெரியவரவே, அவர் துறையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கப் பதிந்து, விசாரணை மேற்கொண்டதில், சின்னராஜா பாலியல் தொல்லை கொடுத்தது உண்மை என தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் சின்ன ராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு திருச்சி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. இந்நிலையில் வழக்கின் இறுதி விசாரணை நிறைவுற்றதை தொடர்ந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில், குற்றவாளி சின்ன ராஜாவுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.3000 அபராதமும் விதித்து நீதிபதி சண்முக பிரியா தீர்ப்பளித்தார். அதோடு, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் இருந்து ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் திறமையாக செயல்பட்டு சாட்சிகளை உரிய நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, குற்றவாளிக்கு உரிய தண்டனை பெற்றுத் தந்த மணப்பாறை மகளிர் காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை மாநகர போலீஸ் கமிஷனர் காமினி வெகுவாக பாராட்டினார்.