Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

அரியலூர், பிப்.16: அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே தடை செய்யப்பட்ட குட்கா விற்ற பெட்டிக் கடை உரிமையாளர் நேற்று கைது செய்யப்பட்டார். செந்துறை அடுத்த நத்தகுழி கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் பிரபாகரன்(35). இவர், நடத்தி வரும் பெட்டிக்கடையில் குட்கா, பான் மசாலா, புகையிலை உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்வதாக அப்பகுதியினர் போலீசாருக்கு ரகசிய தகவல் அளித்துள்ளனர். இதுயடுத்து, அங்கு வந்த செந்துறை காவல் துறையினர் நேற்று கடையில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடையினுள் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலைப் பொருள்கள் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிந்து, பிரபாகரனை கைது செய்து, அவரிடமிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் ெசய்தனர்.