தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

32 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது கன்டெய்னர் லாரி பறிமுதல்

வந்தவாசி, நவ.13: வந்தவாசி அருகே 32 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த வடவணக்கம்பாடி போலீசார் கடந்த 7ம் தேதி அதிகாலை காவல் நிலையம் எதிரே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை ரெட்ஹில்ஸில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லோடு ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில், 32 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கஞ்சா கடத்தல் தொடர்பாக திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செஞ்சி, தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளை சேர்ந்த 7 நபர்களை போலீசார் கைது செய்தனர். மேலும், சென்னை ரெட்ஹில்ஸில் உள்ள லாரி டிரைவரிடம் கஞ்சாவை வாங்கி வந்ததாக கூறியதை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

Advertisement

இந்நிலையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் தாலுகா, மதூர் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன்(36) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பொட்டலம், கன்டெய்னர் லாரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், சென்னையை சேர்ந்த பிரபல லாரி அதிபரிடம் வேலை செய்து வந்ததாகவும், அவருக்கு சொந்தமாக 50க்கும் அதிகமாக லாரிகள் உள்ளதால், வழக்கமாக ஒடிசா மாநிலம் செல்வதாகவும், அவ்வாறு செல்லும்போது அங்கிருந்து கஞ்சா பொட்டலங்களை உரிமையாளருக்கு தெரியாமல் வாங்கி வந்து தமிழகத்தில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, கைது செய்யப்பட்ட மணிகண்டனை நேற்று வந்தவாசி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement