தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் போலீசார் நடவடிக்கை திருவண்ணாமலை கிரிவலப்பாதையில்

திருவண்ணாமலை, நவ.13: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா வரும் 24ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் காலை மற்றும் இரவு சுவாமி மாடவீதி உலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான மகாதீபம் அடுத்த மாதம் 3ம் தேதி மாலை கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்படும். மகாதீபத்தை தரிசிக்கவும் கிரிவலம் செல்லவும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அதையொட்டி, அண்ணாமலையார் கோயில் மற்றும் கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றும் நேற்று காலை தொடங்கியது. தாலுகா இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் 30க்கும் மேற்பட்ட போலீசார் இப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, நடைபாதையில் பக்தர்களுக்கு இடையூறாக ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பாத்திரக்கடைகள், ஜூஸ் கடைகள், டிபன் கடைகள், இளநீர் கடைகள் போன்ற கடைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைக்கக்கூடாது என வியாபாரிகளிடம் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், `கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக நடைபாதைகளை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகளை தொடர்ந்து கண்காணித்து, உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனர்.

Advertisement