தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திமுக முப்பெரும் விழாவில் அணி திரள்வோம் அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு கரூரில் வரும் 17ம் தேதி நடக்கும்

திருவண்ணாமலை, செப்.13: கரூரில் வரும் 17ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் அணி திரள்வோம் என அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து, பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: திமுக முப்பெரும் விழா வரும் 17ம் தேதி கரூரில் நடைபெற உள்ளது. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற தாரக மந்திரத்தை அரசியல் உலகிற்கு அறிமுகம் செய்த பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் மற்றும் பண்பாடு, பகுத்தறிவு, சமத்துவம், சமதர்மம், ஜனநாயகம் எனும் கோட்பாட்டுடன் இயங்கும் திமுக தொடங்கிய நாள் மற்றும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த நாள் ஆகிய மூன்றையும் ஒவ்வொரு ஆண்டும் முப்பெரும் விழாவாக திமுக கொண்டாடி வருகிறது.

Advertisement

விழாவில், பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது, திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் பெயரில் விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று கரூர் மாநகரத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெற உள்ளது. முப்பெரும் விழாவில், திமுகவினர் அனைவரையும் ஒருசேர ஒரே இடத்தில் பார்ப்பதற்காக ஆவலோடு காத்திருக்கிறேன் என்று அழைப்பு விடுத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையை ஏற்று, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் நிர்வாகிகள், அணி சார்ந்த அமைப்பின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் திமுக முன்னோடிகள், கரூர் மாநகர் நோக்கி அணித் திரள்வோம், ஆர்ப்பரிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News