தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் முதியவர் போக்சோவில் கைது ஆரணி அருகே தெருவில் விளையாடிய

ஆரணி, நவ.12: ஆரணி அருகே தெருவில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் டிரைவர். இவரது 5 வயது மகள், அங்குள்ள அரசு பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 8ம் தேதி சிறுமியின் பெற்றோர் வழக்கம்போல் வேலைக்கு சென்றனர். அன்று பள்ளி விடுமுறை என்பதால் தனியாக இருந்த சிறுமி, அருகே உள்ள வீட்டின் எதிரே விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ஜானகிராமன்(72) என்பவர் சிறுமியை அருகில் உள்ள கொட்டகைக்கு தூக்கிச்சென்று பாலியல் சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி கதறி அழுதார். உடனே ஜானகிராமன் சிறுமியை அடித்து, வெளியில் யாரிடமாவது சொன்னால் ஒழித்து விடுவேன் என மிரட்டி வீட்டிற்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், அன்று மாலை வேலையை முடித்துவிட்டு சிறுமியின் தாய் வீட்டிற்கு வந்த போது, சிறுமி அழுது கொண்டிருந்தார். விசாரித்தபோது சிறுமி நடந்த சம்பவம் குறித்து அழுதபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிரபாவதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து முதியவர் ஜானகிராமனை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை திருவண்ணாலை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Advertisement