தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி ஆசிரியர்கள் பாராட்டு நெடும்பிறை அரசு பள்ளி மாணவிகள்

செய்யாறு, நவ.12: செய்யாறு அடுத்த நெடும்பிறை அரசு பள்ளி மாணவிகள் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்று, மாநில போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று, திருவண்ணாமலை வருவாய் மாவட்ட அளவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டிகள் பல்வேறு எடை பிரிவுகளின் கீழ் நடந்தது. இப்போட்டிகளில் 400க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் குத்துச்சண்டை போட்டியில் செய்யாறு கல்வி மாவட்டம், நெடும்பிறை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் லத்திகா, யோக, வாசுமதி, நமிதா, ஜெகதீஸ்வரி, தமிழரசி, டோனிசென்னல், ஹேமாவதி, ஹேமலதா, லிங்கேஸ்வரன் ஆகியோர் தங்கப்பதக்கங்களை வென்றனர். தொடர்ந்து, தேனியில் நடைபெற உள்ள மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் யுவராஜன், பகுதி நேர உடற்கல்வி ஆசிரியை சந்திரகலா ஆகியோரை பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் ராமு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மாணிக்கம், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் ஆனந்தி, சக மாணவ, மாணவிகள், பெற்றோர் பாராட்டினர்.

Advertisement

Advertisement