Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

போளூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி கலெக்டர் வழங்கினார்

சேத்துப்பட்டு, ஜூன் 18: போளூர் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜாமபந்தியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். போளூர் தாலுகா அலுவலகத்தில் 2ம் நாள் ஜமாபந்தி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் வந்தனா கார்க் தலைமை தாங்கி, போளூர் உள்வட்டத்தை சேர்ந்த கிராம பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பட்டா, பட்டா மாற்றம், பட்டா உட்பிரிவு, புதிய ரேஷன் கார்டு, ரேஷன் கார்டு பெயர் நீக்கம், இறப்பு சான்று, வாரிசு சான்று, முதியோர் உதவித்தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.