Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சேத்துப்பட்டில் குளிப்பதை வீடியோ எடுத்து இளம்பெண்ணுக்கு மிரட்டல்: விழுப்புரம் வாலிபர் மீது வழக்கு

சேத்துப்பட்டு, ஜூலை 1: சேத்துப்பட்டில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே ஒரு தெருவை சேர்ந்தவர் 35 வயது இளம்பெண். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவனை இழந்த இளம்பெண் 3 ஆண்டுகளுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த ஏழுமலையின் மகன் ஜெகதீசன், இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததை ரகசியமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.

தற்போது இளம்பெண் சேத்துப்பட்டு மின்வாரிய அலுவலகத்தில் கள உதவியாளராக பணியாற்றி வருவதால், சேத்துப்பட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், ஜெகதீசன் இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்ததை அவரிடம் காட்டி மிரட்டி, பலமுறை தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அதையும் வீடியோ எடுத்து மீண்டும் மிரட்டி பணம் பறித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் செல்போனில் அடிக்கடி ஆபாசமாக பேசி, தனது ஆசைக்கு இணங்குமாறு அழுத்தம் கொடுத்து, மறுத்தால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் விரக்தியடைந்த இளம்பெண் சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், சேத்துப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஜெகதீசனை வலைவீசி தேடி வருகின்றனர்.