Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருவள்ளூர் மாவட்டத்தில் குற்ற செயல்களை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பழைய குற்றவாளிகள் 15 பேர் கைது

திருவள்ளூர், மே 23: திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் 24 காவல் நிலையங்கள் உள்ளன. இந்நிலையில், மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்தா சுக்லா உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும்படி மாவட்ட போலீஸ் எஸ்பி விவேகானந்த சுக்லா போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து திருவள்ளூர், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய காவல் உட்கோட்டங்களுக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

அதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 15 ரவுடிகளை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட பழைய குற்றவாளிகள் எந்தவித சட்டம், ஒழுங்கு பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் எனவும், அப்படி மீறி பிரச்னைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பத்திரங்களை எழுதி போலீசாரிடம் கொடுத்து ஒருவது குறிப்பிடத்தக்கது.