Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

காப்பர் மூட்டை விழுந்து வடமாநில தொழிலாளி பலி

கும்மிடிப்பூண்டி, மே 7: கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மபொசி நகர் பகுதியைச் சேர்ந்தவர் யில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் குமார்(37). இவர் கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மபொசி நகரில் வாடகை வீட்டில் தங்கியபடி சிப்காட்டில் உள்ள காப்பர் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம் போல் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த ராகேஷ் குமார் மீது காப்பர் மூட்டைகள் மேலே சரிந்து விழுந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக தொழிலாளிகள் படுகாயமடைந்த ராகேஷ் குமாரை மீட்டு பெத்திகுப்பம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த ராகேஷ் குமார் நேற்று அதிகாலை இறந்த நிலையில் கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் காவல் நிலைய போலீசார் ராகேஷ் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.