Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

திருத்தணி முருகன் கோயிலில் தரிசனம் செய்ய வந்த கர்நாடக பெண் மாயம்: போலீசார் விசாரணை

திருத்தணி, ஆக.4: திருத்தணி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண் மாயமான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் பெத்தமங்கலா கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கீதா(42) (சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்) கடந்த 1ம் தேதி குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். மலைக் கோயில் மாட வீதியில் அனைவரும் அமர்ந்திருந்த நிலையில் கீதா திடீரென்று காணாமல் போனார்.

அவரை உறவினர்கள் மலைக் கோயில் உள்பட பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் அவரை பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் நேற்று திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் மலைக் கோயிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் வைத்து தேடி வருகின்றனர்.