Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அதிவிரைவு ரயில் இயந்திர கோளாறு: ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி

ஆவடி, ஜூலை 2: மங்களூர் அதிவிரைவு ரயில் திடீர் என பழுதடைந்ததால், ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். அதனால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மங்களூரில் இருந்து நேற்று முன்தினம் மாலை 4 மணி அளவில் புறப்பட்ட அதிவிரைவு ரயில் நேற்று காலை ரயில் இன்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் ஆவடி ரயில் நிலையத்தில் சுமார் 8 மணி அளவில் நிறுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து, நீண்ட நேரம் ஆகியும் சரி செய்ய முடியாததால் ரயில் பழுது பார்க்க முடியாமல் ரயில்வே ஊழியர்கள் திணறினர். இதனால், நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளானார்கள். ஒருசில பயணிகள் புறநகர் செல்லும் மின்சார ரயில், மாநகர பேருந்து, கார் ஆகியவற்றில் புறப்பட்டு சென்றனர்.