Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பவானி ஆற்றில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி பலி

சத்தியமங்கலம், மே 16: சத்தியமங்கலம் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை கிராமம் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்த பொங்கியண்ணன் மகன் யோகேஷ் (13). அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் நேற்று மதியம் தனது நண்பர்களுடன் அருகே உள்ள பவானி ஆற்றிற்கு சென்று குளித்தார்.

எதிர்பாராதவிதமாக ஆழமான பகுதிக்கு சென்ற யோகேஷ் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி மாயமானார். இதைக் கண்ட அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பவானி ஆற்றில் இறங்கி மாயமான யோகேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.