தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், நவ. 12: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் புதியதாக திறக்கப்படும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் புதியதாக நிரப்பப்படாமல் ஏற்கனவே உள்ள மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பணி செய்ய நிர்பந்திக்கப்படுகின்றனர்.

Advertisement

ஆட்குறைப்பு செய்யப்படும் மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு ஜேஆர் மறுசீரமைப்பை கைவிட வேண்டும், புதிய அரசு மருத்துவமனைகளுக்கான மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களை நியமனம் செய்ய வேண்டும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் டாக்டர் சுரேஷ் ராஜ்குமார் மற்றும் அனைத்து பிரிவு மருத்துவர்களும் கலந்துகொண்டனர்.

 

Advertisement