Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

திருப்பூர் அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து நோயாளிக்கு சிகிச்சை

திருப்பூர், மே 23: திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தரையில் படுக்க வைத்து நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், தாராபுரம் ரோட்டில், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனை 5 தளங்களை கொண்ட பல்வேறு கட்டிடங்களுடன் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, ஸ்கேன் மையம் என தனித்தனி கட்டிடங்களில் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதிய கட்டிடத்தில் அவரச சிகிச்சை பிரிவு முதல் தளத்திலும், மற்றும் ஆண், பெண் பொது வார்டுகள் 4 மற்றும் 5ம் தளத்திலும் செயல்படுகிறது. நோயாளிகளுடன் அவர்கள் உறவினர்கள் தங்கியுள்ளனர். கடந்த திமுக ஆட்சியில் மருத்துவமனையை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தி பல கோடி மதிப்பிலான உபகரணங்கள் வாங்கி பொதுமக்கள் வசதிக்காக கொடுக்கப்பட்டது. அந்த உபகரணங்கள் பழுதாகி அதனை சரி செய்யாமல் இருப்பதால் நோயாளிகள் அவதியுறுகின்றனர்.