Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

கோட்டமங்கலம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு மக்கள் முற்றுகை போராட்டம்

உடுமலை, மே 19: உடுமலை அடுத்துள்ள கோட்டமங்கலம் ஊராட்சியில் குடிநீர் கேட்டு மக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.உடுமலை அருகே உள்ள கோட்டமங்கலம் ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு திருமூர்த்தி அணையில் இருந்து குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20 நாட்களாக ஊராட்சிக்கு குடிநீர் வரவில்லை. இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 200 பேர் கோட்டமங்கலம் ஊராட்சி அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால், சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.