ரயில் மோதி முதியவர் பலி
Advertisement
திருப்பூர், டிச. 10: ஈங்கூர்- விஜயமங்கலம் இடையே 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக திருப்பூர் ரயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரயிலில் அடிபட்டு உயிரிழந்தவர் வெள்ளை, மெரூன் கலரில் கோடுபோட்ட அரைக்கை சட்டையும், சிகப்பு, வெள்ளை கலரில் லுங்கியும் அணிந்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்தவர் யார்? ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது தண்டவாளத்தை கடக்கும்போது எதிர்பாராத விதமாக ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Advertisement