தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வி.கே.புரம் பள்ளி விடுதியில் இருந்து மாயமான பிளஸ்1 மாணவரை கேரளாவில் மீட்ட போலீசார்

வி.கே.புரம், நவ. 12: வி.கே.புரம் பள்ளி விடுதியில் மாயமான பிளஸ்1 மாணவரை போலீசார் கேரளாவில் மீட்டனர். ஆலங்குளம் அருகே உள்ள நெட்டூர் சாலை தெருவை சேர்ந்தவர் சுடலைமுத்து(45). இவரது மனைவி துர்காதேவி. இவர்களுக்கு நாகராஜன்(17), இசக்கிராஜ் என 2 மகன்கள் உள்ளனர். நாகராஜன், வி.கே.புரத்தில் செயல்பட்டு வரும் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்1 படித்து வருகிறார். பள்ளி விடுதியிலேயே தங்கி படித்து வரும் மாணவர், 2 நாட்களுக்கு முன்பு அங்கு வந்த தாயாரை சந்தித்து பேசியுள்ளார். பின்னர் துர்காதேவி வீட்டுக்கு வந்துவிட்டார்.இந்நிலையில் அன்றைய தினம் இரவில் நாகராஜன் விடுதிக்கு வரவில்லை என்று விடுதி காப்பாளர் செல்போனில் சுடலைமுத்துவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது உறவினர்கள் வீடுகளில் விசாரித்தார். மேலும் நாகராஜனுடன் படிக்கும் மாணவர்களிடமும் விசாரித்து பார்த்தார். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து சுடலைமுத்து வி.கே.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து மாயமான மாணவரை தேடினர். இதில் மாணவர், கேரளாவில் இருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து வி.கே.புரம் போலீசார் கேரளா சென்று மாணவரை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement