தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தலைவன்கோட்டை குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

தென்காசி,ஆக.12:தலைவன்கோட்டை குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய கவுன்சிலர் விஜயபாண்டியன் தலைமையில் அப்பகுதி பெண்கள் ஏரளமானோர் திரண்டு வந்து தென்காசியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், ‘எங்களது குடியிருப்பு பகுதிக்கு அருகில் அமைந்து இருக்கும் மலையடிக்குறிச்சி வருவாய் கிராம சர்வே எண்கள் 378/10A, 11A, 11B ஆகியவற்றின் இடங்கள் இருந்து வருகிறது. அந்த சர்வே எண்களில் தனியார் நிறுவனத்தினர் செல்போன் டவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மலையடிகுறிச்சி வருவாய் கிராம பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது. இதன் அருகில் பள்ளி, மைதானம் உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவர். குடியிருப்புகள் மத்தியில் டவர் அமைப்பதனால் பொதுமக்களுக்கும் தீங்கு ஏற்படும். எனவே இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது. மேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டைகளை ஒப்படைத்து விட்டு மலைப்பகுதியில் குடியேறுவோம்’ என்று அதில் கூறியுள்ளனர்.