தென்காசி, ஜன.10: தென்காசி நகராட்சி 6வது வார்டு மலையான் தெருவில் உள்ள ரேஷன்கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை நகர்மன்ற தலைவர் சாதிர் ஆலோசனையின்படி கவுன்சிலர் சுமதி இசக்கிரவி தலைமை வகித்து வழங்கினார். வார்டு செயலாளர் சண்முகநாதன், தகவல் தொழில்நுட்ப அணி சுப்பிரமணியன், அறங்காவலர் இசக்கிரவி, கவுன்சிலர் ஆஷிக் முபினா சன்ராஜா, சண்முகையா, பூமணி, மாவட்ட பிரதிநிதி முகைதீன்பிச்சை, ரெசவுமுகமது, ரெசவுமைதீன், செய்யது பட்டாணி, அஷ்ரப்அலி, செய்யது அம்பியா, முகமதுகனி, பங்கேற்றனர்.
+
Advertisement


