Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நெல்லையில் 11 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

நெல்லை, ஜன. 22: நெல்லையில் 11 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாடிமணி உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவில் தெரிவித்துள்ளதாவது; பாளை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சங்கீதா அன்பு ஜூலியட் ஐகிரவுண்ட் போலீஸ் நிலையத்துக்கும், சந்திப்பு சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் பாளை குற்றப்பிரிவுக்கும், மேலப்பாளையம் சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் விஜி சந்திப்பு குற்றப்பிரிவுக்கும், சந்திப்பு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மேலப்பாளையம் சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமேஸ்வரி சந்திப்பு சட்டம் ஒழுங்கு பிரிவுக்கும், மேலப்பாளையம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மாரியப்பன் பெருமாள்புரம் குற்றப்பிரிவுக்கும், பெருமாள்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரசீதா மேலப்பாளையம் குற்றப்பிரிவுக்கும், தச்சநல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆக்னஸ் பொன்மணி மாநகர குற்றப்பிரிவுக்கும், பாளை ஐகிரவுண்ட் இன்ஸ்பெக்டர் சுந்தரி தச்சநல்லூர் குற்றப்பிரிவுக்கும், பாளை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி சிறுவர் உதவி காவல் பிரிவு இன்ஸ்பெக்டராவும், சிறுவர் உதவி காவல் பிரிவு இன்ஸ்பெக்டர் கோமதி பாளை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டராகவும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.