நெல்லை, ஜூலை 9: நெல்லையில் கவின் ஆணவக்கொலை வழக்கில் சுர்ஜித் உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்றக் காவலை ஜூலை 21ம்தேதி வரை நீட்டித்து நெல்லை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் கவின் (27). மென்பொறியாளரான இவர், நெல்லையைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு பிரிவினர் என்பதால், பெண்ணின் தம்பியான சுர்ஜித் கடந்த 2025ம் ஆண்டு ஜூலை 27ம்தேதி கவினை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தார்.
+
Advertisement


