Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

பாவூர்சத்திரம் அருகே வெறிநாய்கள் கடித்து குதறியதில் 6 ஆடுகள் சாவு

பாவூர்சத்திரம், ஆக.3: தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையானூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லமணி மகன் சுதர்சிங். இவர் தோட்டத்தில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு வெறிநாய்கள் கூட்டமாக புகுந்து தோட்டத்தில் உள்ள கொட்டகையில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை கடித்தது. இதில் சம்பவ இடத்தில் 4 செம்மறியாடுகளும்,2 வெள்ளாடுகளும் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தன. இதையறிந்த ஊர் பொதுமக்கள் அதிகாலையில் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்து அதிர்சியடைந்தனர்.இது தொடர்பாக ஊர்மக்கள் கூறுகையில், சில மாதங்களுக்கு முன்பு மாடக்கண்ணுப்பட்டி பகுதியிலும் இதேபோல் வெறிநாய்கள் கன்றுக்குட்டிகள் மற்றும் ஆடுகளை கொன்றுள்ளது எனவும், இரவு நேரங்களில் விவசாயிகளால் ஆடு, மாடுகளை பாதுகாக்க முடியவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு வெறிநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆவுடையானூர் ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்தனர். பின்பு கால்நடை மருத்துவர் ரமேஷ் வந்து ஆய்வு செய்தார். அப்போது கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் தலையாரி சினேகா, முருகன் உடனிருந்தனர்.