Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நகை, பணம் திருடியவருக்கு ஓராண்டு சிறை

திருச்சி, ஜூன் 18: திருச்சி அரியமங்கலத்தில் வீடு புகுந்து நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் திருடியவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி கோர்ட் நேற்று தீர்ப்பளித்தது.

திருச்சி அரிமங்கலத்தை சேர்ந்தவர் இளங்குமார் (28). இவர் 8.6.25 அன்று தன் அண்ணன் திருமணத்துக்காக வெளியூர் சென்றுவிட்டு, 10.6.25 அன்று மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த மொத்தம் 6 கிராம் தங்க நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது. இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.