தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தூத்துக்குடியில் விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

தூத்துக்குடி, நவ.12: தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து விசைப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்லவில்லை. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து அந்தோணி என்பவருக்கு சொந்தமான பதிவு செய்யப்படாத விசைப்படகில் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன்பிடி தொழிலுக்கு சென்று திரும்பி வந்துள்ளனர். அப்போது அவர்கள் இனிகோ நகர் பகுதியைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களின் வலையை சேதப்படுத்தியதாக கடலினுள் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இரவு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு வந்து மீன்களை இறக்கிக் கொண்டிருந்த போது இனிகோ நகர் பகுதியை சேர்ந்த 10 பேர் விசைப்படகிற்குள் சென்று அங்கிருந்த திரேஸ்புரம் கனிஷ்டன் (35), சிலுவையார் உள்ளிட்டவர்களை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவர்கள் 3 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, விசைப்படகு தொழிலாளர்கள் மீன்பிடிக்க செல்லாமல் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும்பாலான விசைப்படகுகள் மீன்பிடிதுறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

Advertisement

Advertisement