Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

2 கோயிலில் சிலை, பீடங்கள் சேதம்

உடன்குடி, பிப். 5: குலசேகரன்பட்டினம் பாரதி நகர் கிழக்கு கடற்கரை சாலையில் முனியாண்டி சுவாமி, இசக்கியம்மன் கோயில்கள் உள்ளது. நேற்று மதியம் வழக்கம்போல் சாமி கும்பிட இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அப்போது கோயில்களின் பூட்டுகள் உடைக்கபட்ட நிலையில் கிடந்துள்ளது. கோயிலின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த சுவாமி சிலைகள், பீடங்கள், சிற்பங்கள் ஆகியவற்றை கூரிய ஆயுதங்களால் உடைத்தும், கீறியும் சேதப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் சக்திவேலன், மாவட்ட செயலாளர் சுடலைமுத்து ஆகியோர் கோயில்கள், சேதமடைந்த பீடங்களை பார்வையிட்டனர். இதில் சம்பந்தப்பட்ட மர்ம நபர்களை போலீசார் கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்தப்படும் என இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.