தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முடுக்கலான்குளம் மக்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி, நவ. 1: கோவில்பட்டி அருகே நீர்நிலைகள் மற்றும் பொதுப்பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலான்குளம் கிராமத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட பட்டியலின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் அருகே குருமலை உள்ளது. இந்த மலைப்பகுதியில் ஊரணிகள், நீரோடைகள் உள்ளது மட்டுமின்றி புள்ளி மான்கள், கடமான்கள் உள்ளிட்ட உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிகளவில் மூலிகைகளும் உள்ளன. இந்த மலைச்சரிவு பகுதியில் முடுக்கலான்குளம் பகுதி மக்கள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். மேலும் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வருகின்றனர். இப்பகுதியில் நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் ஊராட்சி சார்பில் ஊரணி அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் சில தனி நபர்கள் சட்டவிரோதமாக நிலம் மற்றும் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும், ஊரணி பொதுப்பாதை, குடிநீர் குழாய் ஆகியவற்றை சேதப்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நிலம் வனம் நீர்நிலை பாதுகாப்பு குழு மற்றும் முடுக்கலான்குளம் கிராம மக்கள் கோவில்பட்டி இ.எஸ்.ஐ. மருந்தகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், பட்டியல் இன மக்களின் நிலங்களை மோசடியாக கிரையம் செய்து நீர்நிலைகள் மற்றும் பொதுப்பாதையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Advertisement

Related News