Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கழுகுமலையில் லாரி டிரைவர் மாயம்

ழுகுமலை, ஜூலை 9: கழுகுமலையில் மாயமான லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர். கழுகுமலை வெற்றி விநாயகர் நகரை சேர்ந்தவர் மரகதம் மனைவி ராஜம்மாள். இவரது மகன் பட்டுராஜ் (34). சென்னையில் வசித்து வந்த இவர்கள், தற்போது கழுகுமலையில் வசித்து வருகின்றனர். காய்கறி வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பட்டுராஜ் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் கடந்த 22ம் தேதி சென்னைக்கு லாரியில் செல்வதாக தாயாரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் சென்னைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அவரது தாயார் மற்றும் நண்பர்கள், பட்டுராஜை பல்வேறு இடங்களில் தேடியும் எந்த தகவல் இல்லை. இதுகுறித்து ராஜம்மாள், கழுகுமலை போலீசில் நேற்று புகார் அளித்தார். எஸ்ஐ தமிழ்ச்செல்வன் மற்றும் போலீசார் வழக்கு பதிந்து பட்டுராஜ் எங்கு சென்றார்? என்ன ஆனார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.