Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சின்னாபின்னமான குளத்தூர் - முள்ளூர் சாலை சீரமைக்கப்படுமா?

குளத்தூர், ஜூலை 6: சிதிலமடைந்து சின்னாபின்னமான குளத்தூர்- முள்ளூர் சாலையை சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளாத்திகுளம் ஒன்றியம் குளத்தூர் கிராமத்தில் இருந்து முத்துக்குமராபுரம், வீரபாண்டியபுரம் இணைப்புச் சாலை வழியாக அய்யர்பட்டி, முள்ளூர் வரை செல்லும் சுமார் 8 கிலோ மீட்டர் தூர சாலை உள்ளது. இச்சாலை கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்

படாமல் இருந்த நிலையில், கடந்தாண்டு சாலை சீரமைக்கப்பட்டது. இந்நிலையில் முள்ளூரை அடுத்த கொல்லம்பரம்பு கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கல் குவாரியில் இருந்து தினமும் செல்லும் கனரக வாகனங்களால் சாலை சிதிலமடைந்து கற்கள் பெயர்ந்து சின்னாபின்னமாக போக்குவரத்திற்கு லாயக்கற்று ஓடைபோல் காட்சியளிக்கிறது.

மேலும் இச்சாலை வழியாக தினசரி செல்லும் கனரக வாகனங்களில் இருந்து சிதறி விழும் ஜல்லிக்கற்களால் இவ்வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர். இவ்வழியாக செல்வது ஆபத்தான பயணமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்கின்றனர். மேலும் இப்பகுதி முழுவதும் விவசாய நிலம் என்பதால் விவசாயத்திற்கான பணிகளுக்கு ஆட்களை கூட்டி செல்லும் வாகனங்கள் கூட தற்போது இவ்வழியாக சிரமப்பட்டே சென்று திரும்புகின்றன. எனவே இப்பகுதி பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து துரிதமாக சாலையை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.