Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

குளச்சல் கடலில் தூத்துக்குடி மீனவர் மாயம்

குளச்சல்,ஆக.4: குளச்சல் கடலில் மாயமான தூத்துக்குடி மீனவரை ஹெலிகாப்டரில் தீவிரமாக தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் மடத்தூர் துரைகனி நகரை சேர்ந்தவர் மிக்கேல்ராஜா(46). கடலில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். கடந்த 31ம் தேதி இவர் லூர்து ஜெயமேரி என்பவரின் விசைப்படகில் தருவை மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க ஆழ்கடல் பகுதிக்கு சென்றார். உடன் 6 தொழிலாளர்கள் சென்றனர். நேற்று முன்தினம் மாலை இவர்களது படகு குளச்சல் கடல் பகுதியில் 40 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்துக்கொண்டிருந்தது.

அப்போது படகிலிருந்த மிக்கேல்ராஜாவை காணவில்லை. இயற்கை உபாதை கழிக்கும்போது எதிர்பாராமல் அவர் தவறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது. உடன் சென்ற மீனவர்கள் கடலில் குதித்து அவரை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து மிக்கேல்ராஜாவின் உறவினர் ஆனந்தகுமார்(27), குளச்சல் மரைன் போலீசில் புகார் செய்தார். மரைன் போலீசார் படகில் சென்று மாயமான மீனவரை தேடி வருகின்றனர். மேலும் கொச்சி கோஸ்ட் கார்டு ஹெலிகாப்டரில் சென்றும் மீனவரை தேடி வருகின்றனர். மாயமான மீனவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் மீனவரின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர்.